கோவையில் மத்திய அரசை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆதரவு.!!

வேலை நிறுத்த போராட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கக் கூடாது என்ற கோரிக்கை இருந்ததைத் தொடர்ந்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்புசுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

14-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்றும் இன்றும் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.

இரண்டாவது நாளான இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள், அங்கன்வாடி ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் 14-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.



அப்போது பிஎஸ்என்எல் அலுவலகத்திற்குள் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சிலர் இவர்களது ஆர்ப்பாட்டம் வெற்றி பெற வேண்டும் என முழக்கங்களை எழுப்பி ஆதரவு அளித்தனர். வேலை நிறுத்த போராட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கக் கூடாது என்ற கோரிக்கை இருந்ததைத் தொடர்ந்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.



Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...