வேலை நிறுத்த போராட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கக் கூடாது என்ற கோரிக்கை இருந்ததைத் தொடர்ந்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்புசுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
14-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்றும் இன்றும் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.
இரண்டாவது நாளான இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள், அங்கன்வாடி ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் 14-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
அப்போது பிஎஸ்என்எல் அலுவலகத்திற்குள் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சிலர் இவர்களது ஆர்ப்பாட்டம் வெற்றி பெற வேண்டும் என முழக்கங்களை எழுப்பி ஆதரவு அளித்தனர். வேலை நிறுத்த போராட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கக் கூடாது என்ற கோரிக்கை இருந்ததைத் தொடர்ந்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.