அடுத்தடுத்து இறக்கும் யானைகள்... கோவையில் மேலும் ஒரு 6-வயது பெண் யானை குட்டி உயிரிழப்பு ..!

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் அடுத்தடுத்து யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவை சிறுமுகை வனச்சரகம் பவானி நீர்பிடிப்பு பகுதியில் சுமார் 6-வயது மதிக்கத்தக்க பெண் யானைக் குட்டி இறந்த நிலையில் கண்டியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகம், மோதூர் பெத்திக்குட்டை அடர்வனப்பகுதி, மற்றும் பவானிசாகர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில்வனவர் மற்றும் வனப் பணியாளர்கள் நேற்று ரோந்துப் பணி மேற்கொண்டனர். அப்போது காப்புக்காட்டிலிருந்து சுமார் 60-மீ தொலைவில் உள்ள பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியில் சுமார் 6-வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று இறந்த நிலையில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து யானை உயிரிழப்பு குறித்து மாவட்ட வன அலுவலர் மற்றும் கால் நடை மருத்துவ அலுவலருக்கு தகவல் அளித்தனர். மேலும் மாலை நேரத்தில் அடர் வனப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், இன்று மாவட்ட வன அலுவலர், மற்றும்வனச்சரகர் தலைமையில் கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் மருத்துவ குழுவினர் பெண் யானைக்குட்டிக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் அடுத்தடுத்து யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...