வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்களுடன் சுற்றுலா வந்த அவர், அணை ஓரத்தில் கை கால் கழுவும்போது திடீரென தண்ணீரில் மூழ்கினார். தமிழ்நாடு மற்றும் கேரளா தீயணைப்பு துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநில எல்லையில் அமைந்துள்ள அம்பலபார அணையில் (கீழ் சோலையாறு அணை) நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு இளைஞர் மூழ்கி காணாமல் போன சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.






வால்பாறை அருகே முருகாளி எஸ்டேட் பகுதியில் வசிக்கும் ராஜா, குமாரி தம்பதியரின் மகளுக்கு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கூடலூர் அத்திக்குனா பகுதியிலிருந்து அவர்களது உறவினர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு வந்திருந்தனர். திருமண நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்த நிலையில், நேற்று மாலை தங்களது ஊருக்குத் திரும்ப முடிவு செய்தனர்.




இந்நிலையில், நேற்று மதியம் உறவினர்கள் சுமார் 6 பேர் குடியிருப்பு அருகே உள்ள அம்பலபார அணைக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அணையின் அழகை ரசித்துவிட்டு வரலாம் என்ற நோக்கத்துடன் அவர்கள் அங்கு சென்றனர். அவர்களில் தனுஷ் (வயது 21) என்ற இளைஞரும் இருந்தார். அவர் BSC (CS) படிப்பை முடித்திருந்தாலும், இன்னும் வேலைக்குச் செல்லவில்லை.




அணையின் ஓரத்தில் அனைவரும் தண்ணீரில் கை கால் கழுவினர். திடீரென்று தனுஷ் தண்ணீரில் மூழ்கி காணாமல் போய்விட்டார். உடன் வந்தவர்கள் பதறிப்போய், உடனடியாக வால்பாறை காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.




தகவல் கிடைத்தவுடன், வால்பாறை தீயணைப்புத் துறையினரும், சோலையார் அணை காவல்துறையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அணை பெரிய அளவில் இருப்பதால், உடலை மீட்பது சிரமமாக இருக்கும் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.




திருமண விழாவிற்கு வந்த உறவினர் குடும்பத்தில் நடந்த இந்த சோக சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று கேரளா மாநில காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




இரண்டாவது நாளாக தமிழ்நாடு வால்பாறை தீயணைப்பு துறையினரும், சோலையார் அணை காவல்துறையினரும் உடலை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் உடல் மீட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...