அதற்கான பணியாணையை ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் வழங்கினார்.
கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக முனைவர் வி.கீதாலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணை வேந்தர் குமார் பதவிக்காலம் கடந்த ஆண்டு நவம்பர் 15ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து புதிய துணை வேந்தரை பரிந்துரை செய்யும் வகையில், தேடுதல் குழுவினை அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. அதன்படி முனைவர்.வி.குமரேசன், நோடல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
துணைவேந்தர் நியமனத்திற்கான தேடல் குழு அலுவலகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டது. இணையதளத்தில் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மேலும், விண்ணப்பிக்க கடைசித் தேதி 2021 நவம்பர் 30 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 45க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களிலிருந்து முதல்கட்டமாக 10 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த பிப்ரவரி 12ம் தேதி, தேடுதல் குழுவினருடன் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டனர். இதில் நிர்வாக அனுபவம் மற்றும் பேராசிரியர் அனுபவம் ஆகியவை பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழத்தின் புதிய துணை வேந்தராக முனைவர் வி.கீதாலட்சுமி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியால் தேர்வு செய்யப்பட்டார்.

மேலும், அதற்கான பணியாணையை ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் வழங்கினார்.
முனைவர் வி.கீதாலட்சுமி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயிர் மேலாண்மைத் துறை இயக்குநராக பணியாற்றி வந்தார். விரைவில் கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் பதவியேற்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணை வேந்தர் குமார் பதவிக்காலம் கடந்த ஆண்டு நவம்பர் 15ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து புதிய துணை வேந்தரை பரிந்துரை செய்யும் வகையில், தேடுதல் குழுவினை அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. அதன்படி முனைவர்.வி.குமரேசன், நோடல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
துணைவேந்தர் நியமனத்திற்கான தேடல் குழு அலுவலகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டது. இணையதளத்தில் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மேலும், விண்ணப்பிக்க கடைசித் தேதி 2021 நவம்பர் 30 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 45க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களிலிருந்து முதல்கட்டமாக 10 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த பிப்ரவரி 12ம் தேதி, தேடுதல் குழுவினருடன் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டனர். இதில் நிர்வாக அனுபவம் மற்றும் பேராசிரியர் அனுபவம் ஆகியவை பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழத்தின் புதிய துணை வேந்தராக முனைவர் வி.கீதாலட்சுமி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியால் தேர்வு செய்யப்பட்டார்.
மேலும், அதற்கான பணியாணையை ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் வழங்கினார்.
முனைவர் வி.கீதாலட்சுமி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயிர் மேலாண்மைத் துறை இயக்குநராக பணியாற்றி வந்தார். விரைவில் கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் பதவியேற்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.