ஹிஜாப் விவகாரம்: 30-அடி நீளமுள்ள தேசிய கொடியுடன் பேரணி வந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கட்சியினர்..!

பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஹிஜாப் எங்கள் உரிமை என்றும், கர்நாடக அரசைக் கண்டித்தும் உயர் நீதிமன்றத்தைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பியவாறு மாநாட்டிற்கு வந்தடைந்தனர்.


கோவை: கோவை உக்கடம் பகுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் பேரணி மற்றும் மாநாடு நடைபெறுகிறது.

கர்நாடக மாநில அரசுக் கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரத் தடை பிறப்பித்தது செல்லும் என உயர்நீதிமன்றம் கூறியது இஸ்லாமியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் இஸ்லாமிய மக்கள், உட்பட பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று கோவை உக்கடம் பகுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் பேரணி மற்றும் மாநாடு நடைபெறுகிறது.



இந்நிலையில் இந்த மாநாட்டிற்குக் கலந்து கொள்ள வந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் மற்றும் இஸ்லாமியப் பொதுமக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர், உக்கடம் ஜி.எம் நகரிலிருந்து உக்கடம் வள்ளியம்மை பேக்கரி வரை பேரணியாக வந்தனர்.



இந்த பேரணியில் சுமார் 30-அடி நீளமுள்ள தேசியக் கொடியினை ஏந்தியவாறும் ஹிஜாப்பிற்கு ஆதரவான பதாகைகளை ஏந்தியவாறும் பங்கேற்றனர்.



மேலும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஹிஜாப் எங்கள் உரிமை என்றும், கர்நாடக அரசைக் கண்டித்தும் உயர் நீதிமன்றத்தைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பியவாறு மாநாட்டிற்கு வந்தடைந்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...