ஹிஜாப் விவகாரம்: 30-அடி நீளமுள்ள தேசிய கொடியுடன் பேரணி வந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கட்சியினர்..!

பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஹிஜாப் எங்கள் உரிமை என்றும், கர்நாடக அரசைக் கண்டித்தும் உயர் நீதிமன்றத்தைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பியவாறு மாநாட்டிற்கு வந்தடைந்தனர்.


கோவை: கோவை உக்கடம் பகுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் பேரணி மற்றும் மாநாடு நடைபெறுகிறது.

கர்நாடக மாநில அரசுக் கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரத் தடை பிறப்பித்தது செல்லும் என உயர்நீதிமன்றம் கூறியது இஸ்லாமியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் இஸ்லாமிய மக்கள், உட்பட பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று கோவை உக்கடம் பகுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் பேரணி மற்றும் மாநாடு நடைபெறுகிறது.



இந்நிலையில் இந்த மாநாட்டிற்குக் கலந்து கொள்ள வந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் மற்றும் இஸ்லாமியப் பொதுமக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர், உக்கடம் ஜி.எம் நகரிலிருந்து உக்கடம் வள்ளியம்மை பேக்கரி வரை பேரணியாக வந்தனர்.



இந்த பேரணியில் சுமார் 30-அடி நீளமுள்ள தேசியக் கொடியினை ஏந்தியவாறும் ஹிஜாப்பிற்கு ஆதரவான பதாகைகளை ஏந்தியவாறும் பங்கேற்றனர்.



மேலும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஹிஜாப் எங்கள் உரிமை என்றும், கர்நாடக அரசைக் கண்டித்தும் உயர் நீதிமன்றத்தைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பியவாறு மாநாட்டிற்கு வந்தடைந்தனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...