மத்திய அரசைக் கண்டித்து நாளை நடைபெறும் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 30-ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
கோவை: அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கங்கள், வங்கி ஊழியர்கள் சம்மேளனம் உள்ளிட்ட சங்கத்தினர் நாளை (மார்ச். 28 - 29) ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்குவது குறித்து எதிர்ப்பு தெரிவித்து அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கங்கள், வங்கி ஊழியர்கள் சம்மேளனம் உள்ளிட்ட சங்கத்தினர் நாளை (மார்ச். 28 - 29) ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் ஊழியர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் வங்கி சேவை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, ஐ.ஓ.பி, உள்ளிட்ட வங்கிகள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாது என அறிவித்துள்ளனர். இந்த வேலைநிறுத்தம் நடைபெறும் நாட்களில் வங்கி மற்றும் கிளை அலுவலகங்கள் இயல்பான செயல்பாட்டை உறுதி செய்யத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து இருந்தாலும், தங்கள் வங்கியின் சேவைகளில் குறைந்த அளவு பாதிப்பு ஏற்படக்கூடும் என பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்குவது குறித்து எதிர்ப்பு தெரிவித்து அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கங்கள், வங்கி ஊழியர்கள் சம்மேளனம் உள்ளிட்ட சங்கத்தினர் நாளை (மார்ச். 28 - 29) ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் ஊழியர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் வங்கி சேவை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, ஐ.ஓ.பி, உள்ளிட்ட வங்கிகள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாது என அறிவித்துள்ளனர். இந்த வேலைநிறுத்தம் நடைபெறும் நாட்களில் வங்கி மற்றும் கிளை அலுவலகங்கள் இயல்பான செயல்பாட்டை உறுதி செய்யத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து இருந்தாலும், தங்கள் வங்கியின் சேவைகளில் குறைந்த அளவு பாதிப்பு ஏற்படக்கூடும் என பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.