இந்த ரேக்ளா போட்டியைக்காண, சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், திரண்டு நின்று போட்டியில் பங்கேற்றவர்களை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.
கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகேயுள்ள கணியூர் கிராமத்தில் ரேக்ளா கிளப், மற்றும் கே.பி.ஆர் கல்வி குழுமத்தின் சார்பில் காளையர் திருவிழா என்ற பெயரில் ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டது.

நாட்டு மாட்டு இனங்களைப் பாதுகாத்தல், அவற்றை வளர்க்க வேண்டிய அவசியம் மற்றும் விவசாயத்தில் இயற்கை உரப் பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தல் ஆகியவற்றுக்காக, 3-வது ஆண்டாக நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, தாராபுரம், ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், கிணத்துக்கடவு, நெகமம், செஞ்சேரிமலை, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, மயிலை, காரி, செவலை, மலையன், காங்கயன் இனக் காளைகள் பூட்டப்பட்ட 300-க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் பங்கேற்றன. 200 மீட்டர், 300 மீட்டர் என இரு பிரிவுகளாகப் போட்டிகள் நடைபெற்றன.

இந்த ரேக்ளா போட்டியைக்காண, சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், திரண்டு நின்று போட்டியில் பங்கேற்றவர்களை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.

அதே சமயம் கொரோனா பரவல் காரணமாகக் குறைந்த அளவிலான பார்வையாளர்கள் மட்டுமே பந்தயத்தைக் காண அனுமதிக்கப்பட்டனர்.
நாட்டு மாட்டு இனங்களைப் பாதுகாத்தல், அவற்றை வளர்க்க வேண்டிய அவசியம் மற்றும் விவசாயத்தில் இயற்கை உரப் பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தல் ஆகியவற்றுக்காக, 3-வது ஆண்டாக நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, தாராபுரம், ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், கிணத்துக்கடவு, நெகமம், செஞ்சேரிமலை, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, மயிலை, காரி, செவலை, மலையன், காங்கயன் இனக் காளைகள் பூட்டப்பட்ட 300-க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் பங்கேற்றன. 200 மீட்டர், 300 மீட்டர் என இரு பிரிவுகளாகப் போட்டிகள் நடைபெற்றன.
இந்த ரேக்ளா போட்டியைக்காண, சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், திரண்டு நின்று போட்டியில் பங்கேற்றவர்களை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.
அதே சமயம் கொரோனா பரவல் காரணமாகக் குறைந்த அளவிலான பார்வையாளர்கள் மட்டுமே பந்தயத்தைக் காண அனுமதிக்கப்பட்டனர்.