அதிமுக வெற்றி பெற்றாலும் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை-அதிமுக எம்.எல்.ஏ தாமோதரன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு.!!

வெள்ளலூர் தலைவர் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என அதிமுக எம்.எல்.ஏ தாமோதரன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை: வெள்ளலூர் தலைவர் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை வன்முறைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரிவினர் எம்.எல்.ஏ தாமோதரன் தலைமையில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியில் நேற்று தலைவர் மற்றும் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல், நடைபெற்றது. இந்த மறைமுக தேர்தலின்போது திமுக அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் காவல்துறையினர் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர்.

இந்நிலையில் மதியம் நடைபெற்ற மதிமுக தேர்தலின்போதும் திமுகவினர் மறைமுக தேர்தல் நடக்கக் கொடுக்கப்பட்ட வாக்குச் சீட்டினை கிழித்து எறிந்தனர். இதனையடுத்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் அதிமுகவைச் சேர்ந்த மருதாசலம் தலைவராகவும் கணேஷ் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் வன்முறைக்குக் காரணமானவர்கள் எனக்கு ஒரு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மருதாசலத்தின் மகன் உட்பட 9-பேரை போத்தனூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.



இதனைக் கண்டித்துத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை வன்முறைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரிவினர் எம்.எல்.ஏ தாமோதரன் தலைமையில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.



பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினர் இன்பதுரை, வெள்ளலூர் நடைபெற்ற பேரூராட்சி மறைமுகத் தலைவர் தேர்தலில் ஜனநாயகம் காப்பாற்றப்பட வில்லை. திமுகவினர் வேண்டுமென்றே அராஜகத்தில் ஈடுபட்டு கொலைவெறி ஆயுதங்களுடன் காவல்துறையைத் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் அதிமுகவை சேர்ந்த 9-பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பெண்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நேற்று இரண்டு பெண்களைக் காவல் துறையினர் விடுவித்துள்ளனர்.

இது ஜனநாயகத்திற்குப் புறம்பாக உள்ளது. தமிழக முதல்வர் கோவை மாவட்டத்தை வெறுப்பு கண்ணோட்டத்தில் வைத்துள்ளார் எனவும் தெரிவித்தார். வெள்ளலூர் பேரூராட்சியில் வெற்றிபெற்ற கவுன்சிலர்களுக்கு உரியப் பாதுகாப்பு இல்லை எனவே அவர்களுக்கு உரியப் பாதுகாப்பு வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வன்முறைச் சம்பவத்தை மறைக்கும் நோக்கில் அறப்போர் இயக்கத்தைக் கொண்டு வேண்டுமென்றே எஸ் பி வேலுமணி மீது ஊழல் புகார் உள்ளதாகச் செய்தியாளர் சந்திப்பை வைத்து இதனைத் திசைதிருப்பி உள்ளனர்.

அரப்போர் இயக்கம் முடிந்தால் பொங்கல் பரிசு தொகுப்பில் நடைபெற்ற ஊழலை வெளிக்கொண்டுவர ஆய்வுகளை நடத்தட்டும், என தெரிவித்தார். மேலும் திமுக சேனாதிபதி அங்கு ஆயுதங்களுடன் இருந்தார் என்றும் அந்த வீடியோ ஆதாரமும் தங்களிடம் உள்ளது எனக் கூறிய அவர் அவரை தேர்தல் பார்வையாளர்களாக யாரேனும் நியமித்தார்களா? என கேள்வி எழுப்பினார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...