கிணத்துக்கடவு அண்ணா வீதியிலுள்ள அங்காளம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கோவை: கிணத்துக்கடவில் உள்ள அங்காளம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அண்ணா வீதியில் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் உள்ளது.
இந்தக் கோயிலில் 12-ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் விழா கடந்த 26-ம் தேதி சனிக்கிழமை அன்று மாலை விநாயகர் பூஜையுடன் தொடங்கியது.
இது தொடர்ந்து கோவிலின் முன்பு அமைக்கப்பட்ட யாகசாலையில் முதல் கால யாக வேள்வி பூஜையும், தொடர்ந்து இன்று காலை இரண்டாம் கால யாக பூஜையும் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து யாக சாலையில் வைக்கப்பட்டுள்ள புனிதநீர் தீர்த்த குடங்கள் கோயிலின் கோபுரத்திற்கு மேளதாளங்களுடன் கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசத்திற்குப் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

இந்த கும்பாபிஷேக விழாவில் கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
மேலும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அண்ணா வீதியில் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் உள்ளது.
இந்தக் கோயிலில் 12-ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் விழா கடந்த 26-ம் தேதி சனிக்கிழமை அன்று மாலை விநாயகர் பூஜையுடன் தொடங்கியது.
இது தொடர்ந்து கோவிலின் முன்பு அமைக்கப்பட்ட யாகசாலையில் முதல் கால யாக வேள்வி பூஜையும், தொடர்ந்து இன்று காலை இரண்டாம் கால யாக பூஜையும் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து யாக சாலையில் வைக்கப்பட்டுள்ள புனிதநீர் தீர்த்த குடங்கள் கோயிலின் கோபுரத்திற்கு மேளதாளங்களுடன் கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசத்திற்குப் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழாவில் கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
மேலும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.