கோவை மாநகர காவல்துறை சார்பில் தலைகவசம் அணிவது குறித்தான இருசக்கர விழிப்புணர்வு பேரணி.

கோவை மாநகர காவல் துறை சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்தான இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை, போக்குவரத்து காவல் துணை ஆணையர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மாநகர காவல்துறை சார்பில், தலைகவசம் அணிவது குறித்தான இருசக்கர விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. 



கோவை மாநகர காவல் துறை சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்தான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை, போக்குவரத்து காவல் துணை ஆணையர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். கோவை வடகோவை சிந்தாமணி சந்திப்பில் இருந்து இந்த வாகன பேரணியானது துவங்கியது.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல்துறை மற்றும் தன்னார்வ மகளிர் அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தவிழிப்புணர்வு பேரணியில் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 



இந்த விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட கோவை மாநகர பெண் காவலர்கள், தனியார் அமைப்புகளின் பெண்கள் கலந்து கொண்டு பொதுமக்கள் கட்டாயம் வாகனம் ஓட்டும் போது தலை கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தினார். 

இந்த பேரணியானது, காமராஜர் ரோடு, திருவேங்கடசாமி ரோடு, ஆர்.எஸ் புரம், லாலி ரோடு ஆகிய சந்திப்பு வழியாக சென்று பின்னர் அரசு பொறியியல் கல்லூரியை வந்தடைந்தது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...