ரயில் மோதி யானைகள் உயிரிழக்கும் விவகாரம்: வாளையாறு ரயில்வே தண்டவாளத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் வனத்துறை ஊழியர்களுக்கு பயிற்சி.

யானை நடமாட்டம் குறித்த தகவல்களை எவ்வாறு அனுப்ப வேண்டும், புதிதாக செல்போன் ஆப் மூலம் தகவல்களை பரிமாறுவது குறித்து 19 வன ஊழியர்களுக்கு WWF  விலங்கு நல அமைப்பு, சார்பாக ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.


கோவை: கேரளா- கோவை இடையே உள்ள வாளையாறு முதல் மதுக்கரை இடையேயான ரயில்வே தண்டவாளத்தில், ரயில் மோதி தொடர்ந்து யானைகள் இறந்து வருவதை தடுக்கும் பொருட்டு,பாலக்காடு ரயில்வே கோட்டம் மற்றும் கோவை வனத்துறை இணைந்து பல்வேறு வாய்மொழி ஒப்பந்தங்கள் போட்டுள்ளனர்.



அதன்படி, வாளையார் பகுதியிலுள்ள ஏ, மற்றும் பி லைன்களில், ரயில் கடக்கும்போது 30-40 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. அதே போல், தண்டவாள ஒரத்தில் யானை நிற்பதை முட்புதர்கள் மறைப்பதால், ரயில்வே தண்டவாள ஓரத்தில் உள்ள செடிகள் அகற்றப்பட்டுள்ளது. 



மேலும், மதுக்கரை வனச்சரகதிற்கு உட்பட்ட வாளையார், சோலக்கரையில் 19 ரயில்பாதை கண்காணிப்பாளர்கள் வனத்துறையால் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யானை நடமாட்டம் குறித்து ரயில்வே துறைக்கும், ரயில் வரும் நேரத்தில் அங்கு யானை வருகிறதா என்பது குறித்தும் கண்காணிக்க உள்ளனர். மேலும், யானை வரும் போது ஒலியெழுப்பி ரயில் பாதைகள் அருகே யானைகள் வருவதை தவிர்க்கும் பணியிலும் ஈடுபட உள்ளனர். 



இந்த பணியில் ஈடுபடும்19 ஊழியர்களுக்கு WWFவிலங்கு நல அமைப்பு, சார்பாக ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. சோலக்கரை அருகே நடைபெற்ற இந்த பயிற்சியில்,19 கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர். யானை நடமாட்டம் குறித்த தகவல்களை எவ்வாறு அனுப்ப வேண்டும் என்பது குறித்தும், புதிதாக செல்போன் ஆப் மூலம் தகவல்களை பரிமாறுவது குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. 

மேலும், ரயில்வே தண்டவாளம் அருகே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் யானை நடமாட்டம் கண்டறிந்து குறுஞ்செய்திகள் மூலமாக ரயில்வே பைலட்டுக்கு தகவல்கள் அளிக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...