கோவை 52வது வார்டு பகுதிகளை மாமன்ற உறுப்பினர் இளஞ்செல்வி கார்த்திக் நேரில் சென்று ஆய்வு..!

மேலும், குறைகளைக் கேட்டறிந்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று நிறைவேற்ற முயற்சி செய்வதாக உறுதியளித்தார்.


கோவை: கோவை 52வது வார்டு பகுதிகளை மாமன்ற உறுப்பினர் இளஞ்செல்வி கார்த்திக் நேரில் சென்று ஆய்வு செய்தார்.



கோவை மாநகர் 52வது வார்டு டி ஜெயவர்த்தனவேலு நகர், வேலப்பன் நாயுடு லேஅவுட், கொண்டசாமி நாயுடு லே அவுட் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை 52வது வார்டு மாமன்ற உறுப்பினர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் நேரில் சென்று இன்று சந்தித்தார்.



அப்போது, அங்குள்ள மக்களின் கோரிக்கைகளான பூங்கா பராமரிப்பு, புதிய தெருவிளக்குகள் அமைத்தல், மழைநீர் வடிகால்களை சீரமைத்தல், அனைத்துப் பகுதிகளிலும் கொசுப்புகை மருந்து தெளித்தல், புதிய மழைநீர் வடிகால்களை அமைத்தல், மசக்காளிபாளையம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.



இதனைக் கேட்டறிந்த 52வது வார்டு மாமன்ற உறுப்பினர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று அவற்றை நிறைவேற்ற முயற்சி செய்வதாக உறுதியளித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...