கோவை கிணத்துக்கடவு அருகே நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இருவர் மீது வழக்குப் பதிவு..!

நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த நபர்கள் மீது சந்தேக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலைய பகுதியில் நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலையம் போலீசார் நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு நள்ளிரவு நேரத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த வினோத் (27) மற்றும் கிணத்துக்கடவு மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்த சின்னசாமி (52) ஆகிய இருவர் மீதும் சந்தேக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...