இன்று ஒரு நாள் நடைபெறும் இந்த விழிப்புணர்வு பயிற்சியில் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கோவை: கோவையில் போதைப்பொருள்கள் பயன்பாடு தடுப்பு குறித்து ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.
தமிழக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை சார்பில் போதைப்பொருள்கள் பயன்பாட்டைத் தடுப்பது குறித்து விழிப்புணர்வு (POSA- Prevention Of Substance Abuse Awareness Programme) ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை ராஜவீதி பகுதியில் உள்ள துணிவணிக பள்ளியில் விழிப்புணர்வு பயிற்சி நடைபெறுகிறது.

இதில் POSA அமைப்பைச் சேர்ந்த அலுவலர்கள் கோவை மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு போதைப்பொருள்கள் பயன்பாட்டைத் தடுப்பது குறித்து மாணவர்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என பயிற்சி அளித்தனர்.

மேலும் போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள், போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்களை எவ்வாறு மீட்கலாம் எனவும் எடுத்துரைக்கப்பட்டது.

இன்று ஒரு நாள் நடைபெறும் இந்த விழிப்புணர்வு பயிற்சியில் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஒரு வாரம் கழித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தமிழக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை சார்பில் போதைப்பொருள்கள் பயன்பாட்டைத் தடுப்பது குறித்து விழிப்புணர்வு (POSA- Prevention Of Substance Abuse Awareness Programme) ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை ராஜவீதி பகுதியில் உள்ள துணிவணிக பள்ளியில் விழிப்புணர்வு பயிற்சி நடைபெறுகிறது.
இதில் POSA அமைப்பைச் சேர்ந்த அலுவலர்கள் கோவை மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு போதைப்பொருள்கள் பயன்பாட்டைத் தடுப்பது குறித்து மாணவர்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என பயிற்சி அளித்தனர்.
மேலும் போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள், போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்களை எவ்வாறு மீட்கலாம் எனவும் எடுத்துரைக்கப்பட்டது.
இன்று ஒரு நாள் நடைபெறும் இந்த விழிப்புணர்வு பயிற்சியில் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஒரு வாரம் கழித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.