கோவை அரசு மருத்துவமனையில் உலக காசநோய் தின விழிப்புணர்வு பேரணி.!!

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்ட காசநோய் மையம் இணைந்து இன்று உலக காசநோய் தின விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.


கோவை: காசநோய் பரவுதல் பற்றியும், நோயைத் தடுப்பது குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஆண்டு தோறும், மார்ச் 24-ல், சர்வதேச காசநோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.



அதன்படி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்ட காசநோய் மையம் இணைந்து இன்று உலக காசநோய் தின விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இந்த பேரணியைக் கோவை அரசு மருத்துவமனை முதல்வர், மருத்துவர் நிர்மலா கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.



அரசு மருத்துவமனையில் துவங்கிய இந்த பேரணியானது கலைக்கல்லூரி வழியாக மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது. இந்தப் பேரணியில் காச நோய் குறித்தும், அதன் அறிகுறிகள் குறித்தும், தடுப்பு வழிமுறைகள் குறித்தான பதாகைகளை ஏந்தியவாறு சுமார் 100-க்கும் மேற்பட்டமருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாவட்ட காசநோய் மைய அலுவலர்கள் பேரணியில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வினையொட்டி மருத்துவமனை வளாகத்தில் காசநோய் தின விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டு இருந்தது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...