கோவையில் அவுட்டுகாய் கடித்து குட்டி யானை படுகாயமடைந்த விவகாரம் -மோப்ப நாய் உதவியுடன் களத்தில் இறங்கிய வனத்துறை அதிகாரிகள்.!!

யானை வாயில் காயங்களுடன் கண்டறியப்பட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வனத்துறை அதிகாரிகள் மோப்பநாய் உதவியுடன் வெடிபொருட்கள் உள்ளதா என கண்டறியத் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கோவை போளூவாம்பட்டி, நரசிபுரம் வனப்பகுதியை ஓட்டியுள்ள கிராமங்களில் வெடி பொருட்கள், விலங்குகளை வேட்டையாடும் பொருட்கள் உள்ளதா என வனத்துறை அதிகாரிகள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட முள்ளங்காடு வனப்பகுதியில் அவுட்டுகாய் போன்ற வெடிபொருள் கடித்ததில் 8 எட்டு வயது மதிக்கத்தக்கப் பெண் குட்டியானைவாயில் படுகாயமடைந்தது உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் தாணிகண்டி அருகே பெண் குட்டி யானைக்கு மயக்க ஊசி செலுத்திப் பிடித்த வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்கள் அந்த யானைக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் அவுட்டுகாய்போன்ற வெடிபொருளைக் கடித்ததால் யானைக்கு வாயில் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என கண்டறியப்பட்டது.

இந்நிலையில் யானை வாயில் காயங்களுடன் கண்டறியப்பட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வனத்துறை அதிகாரிகள் மோப்பநாய் உதவியுடன் வெடிபொருட்கள் உள்ளதா என கண்டறியத் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக முள்ளாங்காடு அருகே உள்ள தேவராயபுரம், வெள்ளருக்கம்பாளையம், ஜவ்காடுஉள்ளிட்ட பகுதிகளில் மோப்பநாய் வளவன் மற்றும் பயிற்சியாளர்கள் உதவியுடன் வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை நாட்டு வெடி பொருட்கள், வேட்டையாடப் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஏதும் கிடைக்காத நிலையில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...