கோவையில் அவுட்டுகாய் கடித்து குட்டி யானை படுகாயமடைந்த விவகாரம் -மோப்ப நாய் உதவியுடன் களத்தில் இறங்கிய வனத்துறை அதிகாரிகள்.!!

யானை வாயில் காயங்களுடன் கண்டறியப்பட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வனத்துறை அதிகாரிகள் மோப்பநாய் உதவியுடன் வெடிபொருட்கள் உள்ளதா என கண்டறியத் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கோவை போளூவாம்பட்டி, நரசிபுரம் வனப்பகுதியை ஓட்டியுள்ள கிராமங்களில் வெடி பொருட்கள், விலங்குகளை வேட்டையாடும் பொருட்கள் உள்ளதா என வனத்துறை அதிகாரிகள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட முள்ளங்காடு வனப்பகுதியில் அவுட்டுகாய் போன்ற வெடிபொருள் கடித்ததில் 8 எட்டு வயது மதிக்கத்தக்கப் பெண் குட்டியானைவாயில் படுகாயமடைந்தது உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் தாணிகண்டி அருகே பெண் குட்டி யானைக்கு மயக்க ஊசி செலுத்திப் பிடித்த வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்கள் அந்த யானைக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் அவுட்டுகாய்போன்ற வெடிபொருளைக் கடித்ததால் யானைக்கு வாயில் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என கண்டறியப்பட்டது.

இந்நிலையில் யானை வாயில் காயங்களுடன் கண்டறியப்பட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வனத்துறை அதிகாரிகள் மோப்பநாய் உதவியுடன் வெடிபொருட்கள் உள்ளதா என கண்டறியத் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக முள்ளாங்காடு அருகே உள்ள தேவராயபுரம், வெள்ளருக்கம்பாளையம், ஜவ்காடுஉள்ளிட்ட பகுதிகளில் மோப்பநாய் வளவன் மற்றும் பயிற்சியாளர்கள் உதவியுடன் வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை நாட்டு வெடி பொருட்கள், வேட்டையாடப் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஏதும் கிடைக்காத நிலையில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...