கோவையில் அவுட்டுகாய் கடித்து குட்டி யானை படுகாயமடைந்த விவகாரம் -மோப்ப நாய் உதவியுடன் களத்தில் இறங்கிய வனத்துறை அதிகாரிகள்.!!

யானை வாயில் காயங்களுடன் கண்டறியப்பட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வனத்துறை அதிகாரிகள் மோப்பநாய் உதவியுடன் வெடிபொருட்கள் உள்ளதா என கண்டறியத் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கோவை போளூவாம்பட்டி, நரசிபுரம் வனப்பகுதியை ஓட்டியுள்ள கிராமங்களில் வெடி பொருட்கள், விலங்குகளை வேட்டையாடும் பொருட்கள் உள்ளதா என வனத்துறை அதிகாரிகள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட முள்ளங்காடு வனப்பகுதியில் அவுட்டுகாய் போன்ற வெடிபொருள் கடித்ததில் 8 எட்டு வயது மதிக்கத்தக்கப் பெண் குட்டியானைவாயில் படுகாயமடைந்தது உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் தாணிகண்டி அருகே பெண் குட்டி யானைக்கு மயக்க ஊசி செலுத்திப் பிடித்த வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்கள் அந்த யானைக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் அவுட்டுகாய்போன்ற வெடிபொருளைக் கடித்ததால் யானைக்கு வாயில் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என கண்டறியப்பட்டது.

இந்நிலையில் யானை வாயில் காயங்களுடன் கண்டறியப்பட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வனத்துறை அதிகாரிகள் மோப்பநாய் உதவியுடன் வெடிபொருட்கள் உள்ளதா என கண்டறியத் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக முள்ளாங்காடு அருகே உள்ள தேவராயபுரம், வெள்ளருக்கம்பாளையம், ஜவ்காடுஉள்ளிட்ட பகுதிகளில் மோப்பநாய் வளவன் மற்றும் பயிற்சியாளர்கள் உதவியுடன் வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை நாட்டு வெடி பொருட்கள், வேட்டையாடப் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஏதும் கிடைக்காத நிலையில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...