கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனி பாலம் வழக்கு ஒத்திவைப்பு..!

தமிழக வழக்கறிஞரால் ஆஜராக முடியாததால் உயர்நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை 25ம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கின்றது.


கோவை: கோவை எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பாலம் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோவை எஸ்.ஐ.எச்.எஸ் காலனி ரயில்வே தண்டவாளத்தின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பணி கடந்த 2013ம் ஆண்டு துவக்கி வைக்கப்பட்டது.

இந்நிலையில், பாலம் கட்டுவதற்கான நிலங்களைக் கையகப்படுத்தாமல் மாநில நெடுஞ்சாலைத்துறை இப்பணியினை தொடங்கியதால் நில உரிமையாளர்கள் உயர்மட்ட பாலம் அமைவதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.

இதன் காரணமாக பாலம் கட்டும் வேலையானது பாதியில் நிறுத்தப்பட்டது. பாலம் அமைக்கும் பணியினை தற்போது திமுக விரைவு செய்துள்ளது. நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கு இதனை கொண்டு சென்றனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் ஆலோசித்த அவர் தகுந்த இழப்பீடு வழங்கி பாலம் வேலையினை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க ரூ.29 கோடியே 31 லட்சத்து 87 ஆயிரத்து 910 ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது. அதில் நிலம் கையகப்படுத்த சதுரடிக்கு ரூ.2,600 இழப்பீடு 100 சதவீதம் வழங்க அறிவுறுத்தப்பட்டது.

நிலம் கையகப்படுத்த சதுரடிக்கு ரூ.1,200, இழப்பீடாக சதுரடிக்கு 2,600 என ரூ.5,200 உடன் 12 சதவீத வட்டி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இழப்பீடு தொகைக்கும் 12 சதவீதம் வட்டி வழங்க வேண்டும் என்று நில உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நெடுஞ்சாலைத்துறையினரோ கையகப்படுத்தும் நிலத்திற்கான மதிப்புக்கு மட்டுமே வட்டி வழங்க முடியும் என்றும், இழப்பீடு தொகைக்கான வட்டியை வழங்கினால் அரசுக்கு இழப்பு ஏற்படும் என்கின்றனர். அதனால் நெடுஞ்சாலைத் துறையினரால் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதுதொடர்பான விசாரணை நேற்று நடைபெற்றது. இதில் தமிழக வழக்கறிஞரால் ஆஜராக முடியாததால் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், உயர்நீதிமன்றம் இந்த வழக்கினை 25ம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கின்றது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...