கோவை மாநகராட்சி 37வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் மேயர் திடீர் ஆய்வு..!

அப்பகுதிகளில் பள்ளிகளின் அடிப்படை வசதிகள், அங்கன்வாடி மையம்‌ புதுப்பிக்க, புதிய ஆழ்குழாய்‌ அமைக்க, பழுதடைந்த ஆழ்குழாய்‌ சரிசெய்வது குறித்தும் கேட்டறிந்தார்.


கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌. 37க்குட்பட்ட பகுதிகளில்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ அவர்கள்‌ திடீர்‌ ஆய்வு மேற்கொண்டார்‌.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌. 37க்குட்பட்ட கல்வீரம்பாளையம்‌ மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்‌ மேயா்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, பள்ளியின்‌ அடிப்படை வசதிகள்‌ குறித்துக் கேட்டறிந்து, அங்குள்ள அங்கன்வாடி மையம்‌ புதுப்பிக்கவும்‌, கூடுதல்‌ வகுப்பறைகள்‌ கட்டவும்‌ அறிவுரை வழங்கினார்‌.

அதனைத்‌ தொடர்ந்து, முருகன்‌ நகர்‌, தோப்பில்‌ நகர்‌, பாரதி நகர்‌, முத்து நகர் ஆகிய பகுதிகளில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ குறித்து கேட்டறிந்தபோது, அங்குள்ள பொதுமக்கள்‌ அப்பகுதிக்கு புதிதாக ஆழ்குழாய்‌ கிணறு அமைத்துத் தர வேண்டும்‌ என கோரிக்கையை ஏற்று, புதிய ஆழ்குழாய்‌ அமைக்கவும்‌, பழுதடைந்த ஆழ்குழாய்‌ சரிசெய்திடவும்‌, கோடைக் காலத்தில்‌ சீரான குடிநீர் விநியோகம்‌ செய்திட வேண்டும்‌ எனவும்‌ அறிவுறுத்தினார்‌.

பின்னர்‌, மருதாபுரம்‌ ஆரம்பப்பள்ளியின்‌ கட்டிடங்களை நேரில்‌ பார்வையிட்டு, அப்பள்ளியில்‌ தேவைக்கேற்ப கூடுதல்‌ வகுப்பறை கட்டிடம் கட்டுவது சம்பந்தமாக பொறியாளர்களிடம்‌ கேட்டறிந்தார்கள்‌. பின்பு நஞ்சப்பன்‌ வீதியில்‌ அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி கூடம்‌ கட்டிடத்தை ஆய்வு செய்தபோது, மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ அப்பள்ளியில்‌ காம்பவுண்ட்‌ சுவர் கட்டித்தர வேண்டும்‌ என்ற அங்குள்ள பொதுமக்களின்‌ கோரிக்கையை ஏற்று காம்பவுண்ட்‌ சுவர்‌ கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌ என உறுதியளித்தார்.



இந்த ஆய்வின்போது, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மோ.ஷர்மிளா, வடவள்ளி முன்னாள்‌ பேரூராட்சி தலைவர் வ.ம.சண்முக சுந்தரம்‌, 37வது வார்டு மாமன்ற உறுப்பினர்‌ குமுதம்‌ குப்புசாமி, மேற்கு மண்டல உதவி ஆணையாளர்‌ சரவணன்‌, உதவி செயற்பொறியாளர்‌ ஹேமலதா, உதவி பொறியாளர்‌ திருகல்யாணசுந்தரம்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...