கோவை மாநகராட்சி 37வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் மேயர் திடீர் ஆய்வு..!

அப்பகுதிகளில் பள்ளிகளின் அடிப்படை வசதிகள், அங்கன்வாடி மையம்‌ புதுப்பிக்க, புதிய ஆழ்குழாய்‌ அமைக்க, பழுதடைந்த ஆழ்குழாய்‌ சரிசெய்வது குறித்தும் கேட்டறிந்தார்.


கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌. 37க்குட்பட்ட பகுதிகளில்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ அவர்கள்‌ திடீர்‌ ஆய்வு மேற்கொண்டார்‌.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌. 37க்குட்பட்ட கல்வீரம்பாளையம்‌ மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்‌ மேயா்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, பள்ளியின்‌ அடிப்படை வசதிகள்‌ குறித்துக் கேட்டறிந்து, அங்குள்ள அங்கன்வாடி மையம்‌ புதுப்பிக்கவும்‌, கூடுதல்‌ வகுப்பறைகள்‌ கட்டவும்‌ அறிவுரை வழங்கினார்‌.

அதனைத்‌ தொடர்ந்து, முருகன்‌ நகர்‌, தோப்பில்‌ நகர்‌, பாரதி நகர்‌, முத்து நகர் ஆகிய பகுதிகளில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ குறித்து கேட்டறிந்தபோது, அங்குள்ள பொதுமக்கள்‌ அப்பகுதிக்கு புதிதாக ஆழ்குழாய்‌ கிணறு அமைத்துத் தர வேண்டும்‌ என கோரிக்கையை ஏற்று, புதிய ஆழ்குழாய்‌ அமைக்கவும்‌, பழுதடைந்த ஆழ்குழாய்‌ சரிசெய்திடவும்‌, கோடைக் காலத்தில்‌ சீரான குடிநீர் விநியோகம்‌ செய்திட வேண்டும்‌ எனவும்‌ அறிவுறுத்தினார்‌.

பின்னர்‌, மருதாபுரம்‌ ஆரம்பப்பள்ளியின்‌ கட்டிடங்களை நேரில்‌ பார்வையிட்டு, அப்பள்ளியில்‌ தேவைக்கேற்ப கூடுதல்‌ வகுப்பறை கட்டிடம் கட்டுவது சம்பந்தமாக பொறியாளர்களிடம்‌ கேட்டறிந்தார்கள்‌. பின்பு நஞ்சப்பன்‌ வீதியில்‌ அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி கூடம்‌ கட்டிடத்தை ஆய்வு செய்தபோது, மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ அப்பள்ளியில்‌ காம்பவுண்ட்‌ சுவர் கட்டித்தர வேண்டும்‌ என்ற அங்குள்ள பொதுமக்களின்‌ கோரிக்கையை ஏற்று காம்பவுண்ட்‌ சுவர்‌ கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌ என உறுதியளித்தார்.



இந்த ஆய்வின்போது, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மோ.ஷர்மிளா, வடவள்ளி முன்னாள்‌ பேரூராட்சி தலைவர் வ.ம.சண்முக சுந்தரம்‌, 37வது வார்டு மாமன்ற உறுப்பினர்‌ குமுதம்‌ குப்புசாமி, மேற்கு மண்டல உதவி ஆணையாளர்‌ சரவணன்‌, உதவி செயற்பொறியாளர்‌ ஹேமலதா, உதவி பொறியாளர்‌ திருகல்யாணசுந்தரம்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...