கைது செய்யப்பட்ட காதலன் கார்த்திக்கிற்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவை: கோவை பொள்ளாச்சி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காதலனை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஒக்கிலிபாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பாபு. இவரது மகள் நிவேதா(19).
இவர் கடந்த 12ம் தேதி வீட்டில் தனக்கு தானே மண்ணென்னையை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அப்போது, அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் பலத்த தீக்காயங்களுடன் இருந்த நிவேதாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இச்சம்பவம், குறித்து வழக்குப்பதிவு செய்த வடக்கிபாளையம் போலீசார் நிவேதாவிடம் விசாரணை மேற்கொண்டபோது, தேவராயபுரத்தைச் சேர்ந்த உறவினர் கார்த்தி என்பவர் காதலித்து வந்ததாகவும், பலமுறை இருவரும் வெளியில் சென்று உள்ளதாகவும் தெரிவித்தார்.
பின்னர், திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டதால் கார்த்தி மறுத்து உள்ளார். இதனால் தற்கொலைக்கு முயன்றதாக வாக்குமூலம் அளித்தார்.
இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த நிவேதா இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, கார்த்தியை கைது செய்த போலீசார், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து செய்து சிறையில் அடைத்தனர்.
கார்த்திக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள ஒக்கிலிபாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பாபு. இவரது மகள் நிவேதா(19).
இவர் கடந்த 12ம் தேதி வீட்டில் தனக்கு தானே மண்ணென்னையை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அப்போது, அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் பலத்த தீக்காயங்களுடன் இருந்த நிவேதாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இச்சம்பவம், குறித்து வழக்குப்பதிவு செய்த வடக்கிபாளையம் போலீசார் நிவேதாவிடம் விசாரணை மேற்கொண்டபோது, தேவராயபுரத்தைச் சேர்ந்த உறவினர் கார்த்தி என்பவர் காதலித்து வந்ததாகவும், பலமுறை இருவரும் வெளியில் சென்று உள்ளதாகவும் தெரிவித்தார்.
பின்னர், திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டதால் கார்த்தி மறுத்து உள்ளார். இதனால் தற்கொலைக்கு முயன்றதாக வாக்குமூலம் அளித்தார்.
இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த நிவேதா இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, கார்த்தியை கைது செய்த போலீசார், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து செய்து சிறையில் அடைத்தனர்.
கார்த்திக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.