வெகு விரைவில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் - முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்..!

ககன்யான் திட்டத்தில் மனிதனை விண்ணுக்கு அனுப்புவதற்கான சோதனை முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.


கோவை: வெகு விரைவில் விண்ணுக்கு மனிதனை அனுப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.



கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள கற்பகம் கல்லூரியின் 12வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.



இதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் சிவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதையடுத்து செய்தியாளரிடம் பேசிய சிவன் கூறியதாவது:-



குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவதற்கு தற்போதைய முதலமைச்சர் மற்றும் கனிமொழி ஆகியோர் பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் முயற்சி எடுத்தார் எனவும், 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் திட்டம் நடைபெற்று வருகிறது.

தற்போது வரை 1,200 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ராக்கெட் ஏவுதளம் அமையும் போது, சிறிய அளவிலான ராக்கெட்டுகள் எளிதாக செலுத்த ஏதுவாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், குலசேகரபட்டினம் மட்டுமல்ல அதைச் சுற்றியுள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் அறிவியல் தொழில் நுட்பங்கள் எளிதாக கிடைக்கும் எனவும் தமிழக அரசு மட்டுமல்லாமல் மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த ஆர்வமாக உள்ளதாக அவர் தெரிவித்தார். ககன்யான் திட்டத்தில் மனிதனை விண்ணுக்கு அனுப்புவதற்கான சோதனை முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

வெகு விரைவில் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்த சிவன், பருவ நிலை மாற்றம் என்பது ஒரு உலகளாவிய மிகப்பெரிய சவால். அதை எதிர்கொள்வதற்கும் சரி, அதை உன்னிப்பாக கவனிப்பதற்கும் நமது இந்திய அரசாங்கம் விண்வெளி ஆராய்ச்சி மூலம் தொடர்ந்து பல கட்ட ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...