கோவை மணியகாரம்பாளையத்தில்‌ சிறப்பு தூய்மைப்பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ துவங்கி வைத்துஆய்வு..!

மேலும், சீரான குடிநீர் விநியோகம்‌ செய்யுமாறு உதவி பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.



கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌. 19க்குட்பட்ட மணியகாரம்பாளையத்தில்‌ சிறப்பு தூய்மைப்பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌. 19க்குட்பட்ட மணியகாரம்பாளையம்‌, பாலமுருகன்‌ நகா்‌, அசோக்‌ நகர்‌, அம்மன்‌ நகர்‌, 146 காலனி, அம்மன்‌ நகர்‌ பூங்கா, அசோக்‌ நகர்‌ பூங்கா ஆகிய இடங்களில்‌ சிறப்பு தூய்மைப்பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌. 19க்குட்பட்ட மணியகாரம்பாளையம்‌, பாலமுருகன்‌ நகர்‌, அம்மன்‌ நகர்‌, அசோக்‌ நகர்‌ ஆகிய பகுதிகளில்‌ உள்ள பூங்காக்களை சீரமைத்து, அப்பகுதியில்‌ ஆர்வமுள்ள குடியிருப்போர்‌ நலச்சங்கத்திடம்‌ வழங்கிட அறிவுறுத்தினார்‌. சீரான குடிநீர் விநியோகம்‌ செய்யுமாறு உதவி பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.

மேலும்‌, அப்பகுதியின்‌ சாலையோரங்களில்‌ உள்ள செடி கொடிகளை அகற்றுதல், தேங்கிய குப்பைகளை அகற்றுதல்‌, மழைநீர்‌ வடிகால்‌ கால்வாயில்‌ தேங்கியுள்ள செடி, கொடிகளை அகற்றிடவும்‌ சுகாதார ஆய்வாளர்கள்‌ மற்றும்‌ பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌. மேலும்‌, சிறப்புத்தூய்மைப்பணியின்‌ மூலம்‌ சேகரமாகும்‌ குப்பைகளை உடனடியாக வாகனம்‌ மூலம்‌ ஏற்றி அப்புறப்படுத்த அறிவுறுத்தினார்‌.



இந்த ஆய்வின்போது, 31வது வார்டு மாமன்ற உறுப்பினர்‌ வைரமுருகன்‌ என்கிற முருகன்‌, வடக்கு மண்டல உதவி ஆணையாளர்‌ மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர்‌ செந்தில்பாஸ்கர்‌, உதவி நகரமைப்பு அலுவலர்‌ (பொ) விமலா உதவி பொறியாளர்‌ இளங்கோவன்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ இராதாகிருஷ்ணன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...