கோவை காந்திமாநகர் அருகே ரேசன் அரிசியை பதுக்கி விற்க முயன்றவர் கைது - 5 டன் ரேசன் அரிசி பறிமுதல்..!

சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரேசன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி கேரளாவில் அதிக விலைக்கு விற்க முயன்றவர் கைது.


கோவை: கோவை காந்திமாநகர் அருகே ரேசன் அரிசியை பதுக்கி விற்க முயன்ற கண்ணன் என்பவர் கைது செய்த போலீசார் 5 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

கோவை காந்திமாநகர் பகுதியில் குடிமைப் பொருட்கள் கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது விவேகானந்தர் வீதியை சேர்ந்த கண்ணன் என்பவரது வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட ஆட்டோ மற்றும் பிக்கப் வேனை சோதனை செய்த போது அதில் 5 டன் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.

சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரேசன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி அதை கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, கண்ணனை கைது செய்த போலீசார் 5 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...