கோவை காந்திமாநகர் அருகே ரேசன் அரிசியை பதுக்கி விற்க முயன்றவர் கைது - 5 டன் ரேசன் அரிசி பறிமுதல்..!

சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரேசன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி கேரளாவில் அதிக விலைக்கு விற்க முயன்றவர் கைது.


கோவை: கோவை காந்திமாநகர் அருகே ரேசன் அரிசியை பதுக்கி விற்க முயன்ற கண்ணன் என்பவர் கைது செய்த போலீசார் 5 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

கோவை காந்திமாநகர் பகுதியில் குடிமைப் பொருட்கள் கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது விவேகானந்தர் வீதியை சேர்ந்த கண்ணன் என்பவரது வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட ஆட்டோ மற்றும் பிக்கப் வேனை சோதனை செய்த போது அதில் 5 டன் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.

சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரேசன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி அதை கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, கண்ணனை கைது செய்த போலீசார் 5 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...