ஹிஜாப் தடை விவகாரம் - கர்நாடக அரசைக் கண்டித்து திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கம் ஆர்ப்பாட்டம்..!

திராவிடர் பண்பாட்டுக் கூட்டியக்கம் சார்பில் கோவை உக்கடம் பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


கோவை: ஹிஜாப் தடை விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டித்து திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதைத் தடை செய்து கர்நாடக அரசு வெளியிட்ட அறிவிப்பை அம்மாநில உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக, திராவிடர் பண்பாட்டுக் கூட்டியக்கம் சார்பில் கோவை உக்கடம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் திராவிடர் இயக்கங்கள், தலித் இயக்கங்கள், இசுலாமிய இயக்கங்கள் உள்ளிட்ட 17 இயக்கங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதை தடை செய்வதைக் கண்டித்தும், இத்தடையை விலக்க கோரியும், கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இது குறுத்து செய்தியாளர்களிடம் பேசிய கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வெண்மணி கூறியதாவது:-

நாட்டில் நிலவி வரும் சமூக நல்லிணக்கத்திற்கு எதிராகவும், சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை நாடு முழுவதும் அமல்படுத்த முயலும் சங்பரிவார அமைப்புகளுக்கும், மத்தியில் ஆளும் பாஜகவிற்கும் கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறினார்.

இந்த விவகாரத்தில் தமிழகத்தை ஆளும் திமுக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் ஆக்கப்பூர்வமாக உள்ளதாகவும், மதுரையில் ஹிஜாப் அணிந்து வந்த வாக்காளரை அச்சுறுத்திய நபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது போன்ற நடவடிக்கைகளை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...