இதுகுறித்து பேரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை பேரூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பால் வியாபாரி உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
கோவை ஆலந்துறை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். பால் வியாபாரியான இவர் நேற்று மாலை பேரூர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு பால் எடுக்க சென்றார். இதையடுத்து, இவர் இரவு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது, சிறுவாணி சாலை பேரூர் அருகே சென்ற போது, மாதம்பட்டியிலிருந்து செல்வபுரம் நோக்கி, தனது 2 நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற ராஜேஷ், நாகராஜ் வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியதாக தெரிகிறது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்து உயிருக்கு போராடிய ராஜேஷ் மற்றும் அவரது நண்பரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணியளவில் ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பேரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை ஆலந்துறை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். பால் வியாபாரியான இவர் நேற்று மாலை பேரூர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு பால் எடுக்க சென்றார். இதையடுத்து, இவர் இரவு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது, சிறுவாணி சாலை பேரூர் அருகே சென்ற போது, மாதம்பட்டியிலிருந்து செல்வபுரம் நோக்கி, தனது 2 நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற ராஜேஷ், நாகராஜ் வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியதாக தெரிகிறது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்து உயிருக்கு போராடிய ராஜேஷ் மற்றும் அவரது நண்பரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணியளவில் ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பேரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.