கோவை பேரூர் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - பால்வியாபாரி உட்பட இருவர் பலி…!

இதுகுறித்து பேரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை பேரூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பால் வியாபாரி உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.

கோவை ஆலந்துறை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். பால் வியாபாரியான இவர் நேற்று மாலை பேரூர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு பால் எடுக்க சென்றார். இதையடுத்து, இவர் இரவு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது, சிறுவாணி சாலை பேரூர் அருகே சென்ற போது, மாதம்பட்டியிலிருந்து செல்வபுரம் நோக்கி, தனது 2 நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற ராஜேஷ், நாகராஜ் வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியதாக தெரிகிறது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்து உயிருக்கு போராடிய ராஜேஷ் மற்றும் அவரது நண்பரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணியளவில் ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பேரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...