ஆதிக்க சாதி கவுன்சிலர்கள் பணி செய்யவிடாமல் மிரட்டுவதாக, கோவை மத்வராயபுரம் ஊராட்சி தலைவர் புகார்..!

அடிப்படை மற்றும் அவசர பணிகளை மேற்கொள்ள முடியாமல், சிரமப்படுவதாகவும், ஆதிக்க கவுன்சிலர்கள், பழங்குடியினத்தை சார்ந்த தன்னை கேவலமாகப் பார்ப்பதோடு, மன உளைச்சலை ஏற்படுத்தி மிரட்டுவதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.



கோவை: ஆதிக்க சாதி கவுன்சிலர்கள் பணி செய்யவிடாமல் மிரட்டுவதாக, கோவை மத்வராயபுரம் ஊராட்சி தலைவர் புகார் அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் மத்வராயபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கிட்டுச்சாமி. பழங்குடியினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட இந்த தொகுதியில் ஊராட்சி தலைவராக இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.



இந்நிலையில் தன்னை பணி செய்ய விடாமல் ஆதிக்க சாதி கவுன்சிலர்கள் தடுப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தார். அவர் அளித்த புகாரில் தான், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால், ஆதிக்கச் சாதியைச் சார்ந்த 4 கவுன்சிலர்களோடு பழங்குடியினத்தை சார்ந்த ஒரு கவுன்சிலரும் சேர்ந்து (கவுன்சிலர்கள் மூர்த்தி, ஜோதிமணி, ராணி, நாகராஜ், முருகேஷ்) தன்னை பணி செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர்.

மேலும் ஊராட்சி மன்ற கூட்டத்தினை நடத்தவிடாமல் தடுத்து வருகின்றனர். கவுன்சிலர்கள் ஐந்து பேரும் தாங்கள் தேர்தலுக்கு செலவு செய்த 6 லட்சத்தை எப்படி எடுப்பது எனவும், தங்களுக்கு மாதம் தோறும் ஒரு தொகை வழங்க வேண்டும் என தன்னை மிரட்டுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தூய்மைப்பணியாளர்கள், பிளம்பர், தண்ணீர் விடுபவர் உள்ளிட்டவர்களையும் பணி செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர். இதனால் மத்வராயபுரம் ஊராட்சியில் அடிப்படை மற்றும் அவசர பணிகளை மேற்கொள்ள முடியாமல், சிரமப்படுவதாகவும், ஆதிக்க கவுன்சிலர்கள், பழங்குடியினத்தை சார்ந்த தன்னை கேவலமாகப் பார்ப்பதோடு, மன உளைச்சலை ஏற்படுத்தி மிரட்டுவதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...