கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் மதுபானங்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி.

கள்ளச்சாராயம் மற்றும் மதுபானங்களால் ஏற்படும் தீமைகள் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.



கோவை: கள்ளச்சாராயம் மற்றும் மதுபானங்களால் ஏற்படும் தீமைகள் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை, மாவட்ட ஆட்சியர், ஜி.எஸ். சமீரன் துவக்கி வைத்தார்.



கங்கை கருங்குயில், கலை குழுவினர் நடத்திய இந்த நிகழ்ச்சியில் கரகாட்டம், தெரு நாடகம் மூலம் கள்ளச்சாரயம் மற்றும் மதுபானத்தின் தீமைகள் குறித்து மக்களுக்கு புரியும்படி எளிய முறையில் எடுத்துரைக்கப்பட்டது. அதே போன்று, கதிரவன் கலைக்குழுவினர், எமதர்மன் சித்திரகுப்தன் வேடமணிந்துவிழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.



மேலும், கள்ளச்சாராயம் மற்றும் மதுபானங்களால் ஏற்படும் தீமைகளான - நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, மாரடைப்பு,நரம்பு தளர்ச்சி, மலட்டுதன்மை, குடும்ப தகராறு, அவப்பெயர் ஏற்படுதல், போன்றவை குறித்து விழிப்புணர்வு பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன.



குறைதீர்ப்பு நாளான இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதால், மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.



Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...