கோவையில் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட நிலப் பத்திரத்தை வைத்து ரூ.97 லட்சம் மோசடி; கேரளாவை சேர்ந்த ஒருவர் கைது.

கோவையில் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட நிலப் பத்திரத்தை வைத்து ரூ.97 லட்சம் மோசடி செய்த கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த, சுனில் கோபி என்பவரை கோவை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவையில் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட நிலப் பத்திரத்தை வைத்து ரூ.97 லட்சம் மோசடி செய்த கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த சுனில் கோபி என்பவரை கோவை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை நவக்கரையில் வசித்து வருபவர், கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த சுரேஷ் கோபி. இவரும், கோவை குனியமுத்தூரை சேர்ந்த மயில்சாமி என்பவரும் நண்பர்கள். இந்த நிலையில், மயில்சாமி கடந்த 2011 ஆம் ஆண்டு பண நெருக்கடியில் இருந்ததாக தெரிகிறது. அப்போது, நவக்கரையில் அவருக்கு சொந்தமான 4.25 ஏக்கர் நிலத்தை, சுனில் கோபி பெயருக்கு எழுதி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், சுனில் கோபி அந்த நிலத்தை விற்க முயன்றதாக தெரிகிறது. இதனால், கடந்த 2016 மயில்சாமி, கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில், சுனில் கோபி பெயருக்கு மாற்றப்பட்ட பத்திரத்தை நீதிமன்ற ரத்து செய்து உத்தரவிட்டது. 

ஆனால், சுரேஷ் கோபி நீதிமன்ற உத்தரவை மறைத்து, கிரிதரன் என்பவருக்கு 4.25 ஏக்கர் நிலத்தை ரூ.97 லட்சத்து விற்பனை செய்துள்ளார். இதையடுத்து, கடந்த 2021செப்டம்பரில் பத்திரம் குறித்து இணையதளத்தில் பார்த்த போது, நிலம் சுனில் கோபி பெயரில் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து, கிரிராஜன் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். 

இதையடுத்து, சுனில் கோபி மற்றும் அவரது நண்பர்களான ரீனா, சிவதாஸ் ஆகிய மூன்று பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில், சுனில் கோபியை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுனில் கோபி மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் சகோதரர் என விசாரணையில் தெரிவித்துள்ளார்.

நடிகர் சுரேஷ் கோபிக்கும் இதே பெயரில் தம்பி உள்ளதால், உண்மை தன்மை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...