கோடை வெயிலின் தாக்கம் காரணமாக ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!

திரும்பிய பக்கமெல்லாம் சுற்றுலாப் பயணிகள் வலம் வந்ததால் ஊட்டி நகரில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


கோவை: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், குளுகுளு காலநிலையை ரசிக்க சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்குப் படையெடுக்கின்றனர்.

ஊட்டியில், திரண்ட சுற்றுலா பயணிகள் இதமான காலநிலையை அனுபவித்து மகிழ்ந்தனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், குளுகுளு காலநிலையை ரசிக்க சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்குப் படையெடுக்கின்றனர்.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகை, பெரணி இல்லம், இத்தாலியன் கார்டன் மற்றும் பிரதான புல்தரை மைதானங்களில் சுற்றுலா பயணிகள் திரண்டனர். மலர் செடிகள் முன் நின்று 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.

படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ரோஜா பூங்காவில், ரோஜா மலர்களைக் கண்டு ரசித்தனர். ஊட்டி அருகே பைன்சோலை, சூட்டிங் மட்டம், குன்னுார் டால்பின்நோஸ், லேம்ஸ்ராக் உள்ளிட்டசுற்றுலா ஸ்தலங்களில், சுற்றுலாப் பயணிகள் இயற்கைக் காட்சியைக் கண்டு ரசித்தனர். திரும்பிய பக்கமெல்லாம் சுற்றுலாப் பயணிகள் வலம் வந்ததால் ஊட்டி நகரில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...