இதனையடுத்து, அவரை கைது செய்த 15 வேலம்பாளையம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூரில் மனைவியுடன் தொடர்பில் இருந்த கள்ளக்காதலன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சசிகுமார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு 14 மற்றும் 12 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சசிகுமாரும், பிரியாவும் திருப்பூர் 15 வேலம்பாலையம் பகுதியில் தங்கி இருந்து வேறு, வேறு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்கள்.
இந்நிலையில், 15 வேலம்பாளையம் பகுதியில் தங்கி பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வரும் திருவாரூரை சேர்ந்த தமிழரசன் உடன் பிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
இதனால் சசிகுமார் மனைவி பிரியா சில மாதங்கள் சசிகுமாரை விட்டு சென்று தமிழரசன் அறையில் தங்கி அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். சசிகுமார் பிரியாவிடம் பேசி குழந்தைகளுக்காக தன்னுடன் வந்து வாழ வேண்டும் என்று கூறி அழைத்து வந்து அவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.
இந்நிலையில், பிரியாவுக்கு நேற்று இரவு போன் அழைப்பு வந்தது. போனில் பேசிய பிரியா தனக்கு பனியன் கம்பெனியில் வேலை இருப்பதாக உடனே அழைப்பதாக சசிகுமாரிடம் தெரிவித்து விட்டு கிளம்பி சென்று உள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த சசிகுமார் தமிழரசன் வசிக்கும் அறைக்குச் சென்று பார்த்து உள்ளார்.

அங்கு தமிழரசனும் பிரியாவும் தனியாக இருப்பதை நேரில் பார்த்த அவர் உள்ளே சென்று தமிழரசன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.
பின்னர், நேரடியாக போலீஸ் நிலையம் சென்று சரணடைந்தார். சசிகுமாரை கைது செய்த 15 வேலம்பாளையம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சசிகுமார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு 14 மற்றும் 12 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சசிகுமாரும், பிரியாவும் திருப்பூர் 15 வேலம்பாலையம் பகுதியில் தங்கி இருந்து வேறு, வேறு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்கள்.
இந்நிலையில், 15 வேலம்பாளையம் பகுதியில் தங்கி பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வரும் திருவாரூரை சேர்ந்த தமிழரசன் உடன் பிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
இதனால் சசிகுமார் மனைவி பிரியா சில மாதங்கள் சசிகுமாரை விட்டு சென்று தமிழரசன் அறையில் தங்கி அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். சசிகுமார் பிரியாவிடம் பேசி குழந்தைகளுக்காக தன்னுடன் வந்து வாழ வேண்டும் என்று கூறி அழைத்து வந்து அவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.
இந்நிலையில், பிரியாவுக்கு நேற்று இரவு போன் அழைப்பு வந்தது. போனில் பேசிய பிரியா தனக்கு பனியன் கம்பெனியில் வேலை இருப்பதாக உடனே அழைப்பதாக சசிகுமாரிடம் தெரிவித்து விட்டு கிளம்பி சென்று உள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த சசிகுமார் தமிழரசன் வசிக்கும் அறைக்குச் சென்று பார்த்து உள்ளார்.
அங்கு தமிழரசனும் பிரியாவும் தனியாக இருப்பதை நேரில் பார்த்த அவர் உள்ளே சென்று தமிழரசன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.
பின்னர், நேரடியாக போலீஸ் நிலையம் சென்று சரணடைந்தார். சசிகுமாரை கைது செய்த 15 வேலம்பாளையம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.