திருப்பூரில் மனைவியுடன் தொடர்பில் இருந்த கள்ளக்காதலன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவன் போலீசில் சரண்..!

இதனையடுத்து, அவரை கைது செய்த 15 வேலம்பாளையம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் மனைவியுடன் தொடர்பில் இருந்த கள்ளக்காதலன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சசிகுமார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு 14 மற்றும் 12 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சசிகுமாரும், பிரியாவும் திருப்பூர் 15 வேலம்பாலையம் பகுதியில் தங்கி இருந்து வேறு, வேறு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்கள்.

இந்நிலையில், 15 வேலம்பாளையம் பகுதியில் தங்கி பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வரும் திருவாரூரை சேர்ந்த தமிழரசன் உடன் பிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

இதனால் சசிகுமார் மனைவி பிரியா சில மாதங்கள் சசிகுமாரை விட்டு சென்று தமிழரசன் அறையில் தங்கி அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். சசிகுமார் பிரியாவிடம் பேசி குழந்தைகளுக்காக தன்னுடன் வந்து வாழ வேண்டும் என்று கூறி அழைத்து வந்து அவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.

இந்நிலையில், பிரியாவுக்கு நேற்று இரவு போன் அழைப்பு வந்தது. போனில் பேசிய பிரியா தனக்கு பனியன் கம்பெனியில் வேலை இருப்பதாக உடனே அழைப்பதாக சசிகுமாரிடம் தெரிவித்து விட்டு கிளம்பி சென்று உள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த சசிகுமார் தமிழரசன் வசிக்கும் அறைக்குச் சென்று பார்த்து உள்ளார்.



அங்கு தமிழரசனும் பிரியாவும் தனியாக இருப்பதை நேரில் பார்த்த அவர் உள்ளே சென்று தமிழரசன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.

பின்னர், நேரடியாக போலீஸ் நிலையம் சென்று சரணடைந்தார். சசிகுமாரை கைது செய்த 15 வேலம்பாளையம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...