கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழி பயிலரங்க கருத்தரங்கம் நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆட்சிமொழி பயிலரங்க கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் தமிழ் சொல் விளையாட்டு விளையாடினார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழி பயிலரங்கம் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஆட்சிமொழி குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் எடுத்துக் கூறப்பட்டது. இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையுரையாற்றினார்.
அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் கூறுகையில்,
அலுவலர்கள் அலுவலகத்தில் ஆட்சிமொழியிலேயே பேசவும், கோப்புகளை பூர்த்தி செய்யவும், கையொப்பமிடவும் வேண்டும் எனவும் இதன் மூலமாகவே ஆட்சி மொழியை வரும் சந்ததியினருக்கு எடுத்துச் செல்ல இயலும் என தெரிவித்தார்.
அதே போலவே, வீட்டிலும் ஆட்சிமொழியில் பேச முன்வர வேண்டுமெனவும் கூறினார். நமது பெயர் பெயரின் முன் பெயரும் ஆட்சிமொழியை பயன்படுத்தினால் சிறப்பு எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், 2018-19ம் ஆண்டில் ஆட்சிமொழி திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய மாவட்ட நிலை அலுவலர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளிகளில் நடைபெற்ற தமிழ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அப்போது மாணவ, மாணவிகளிடம் ஆங்கில சொல்லிற்கு தமிழ் சொல் கண்டறியும் வார்த்தை போட்டியை மாவட்ட ஆட்சியர் விளையாடினார்.
மாவட்ட ஆட்சியர் ஆங்கில சொல் கேட்க மாணவ, மாணவிகள் அதற்கான தமிழ் சொல்லை கூறினர்.
மாவட்ட ஆட்சியர் சகஜமாக மாணவ மாணவியருடன் தமிழ் விளையாட்டு விளையாடியது மாணவர்களிடையேயும் அங்கிருந்த அரசு அலுவலர்கள், ஆசிரியர்களிடையேயும், மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.