பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திச் சாதி மதம் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனி தனியாக மனு அளித்தனர்.
கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திச் சாதி மதம் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் தனித்தனியாக மனு வழங்க வந்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வந்த சாதி மதம் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 1000-பேர் பல்வேறு கோரிக்கைகளை தனித்தனியாக வழங்க வந்தனர்.
"விவசாய நிலங்களில் வனவிலங்கு பிரச்சனையைத் தீர்க்க வேண்டும், கோயில் நிலங்கள் குத்தகைக்கு விடுவதில் உள்ள பிரச்சனைகளை களைய வேண்டும், கேஸ் பைப் லைன் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டும், விவசாய நிலங்களுக்கு அருகில் உள்ள கல்குவாரி களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" ஆகிய கோரிக்கைகளையும் அதோடு அவரவர் தனிப்பட்ட கோரிக்கைகளையும் சேர்த்து வழங்கினர்.