கோவையில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பேரூராட்சி ஊழியர் பலி..!

இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தவர் சிகிச்சைக்காகக் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பேரூராட்சி ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை மதுக்கரை முஸ்லிம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (58). இவர் திருமலையம்பாளையம் பேரூராட்சியில் கடந்த 20-ஆண்டுகளாகத் தண்ணீர் விடும் பணிகளைச் செய்து வருகிறார்.

இந்நிலையில் பாரதி நேற்று வழக்கம்போல் பணிக்குச் சென்றுவிட்டு மீண்டும் பாலக்காடு சர்வீஸ் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது சாலையின் வலது புறத்திலிருந்த இருசக்கர வாகன ஒர்க்ஷாப்க்கு செல்ல திரும்பியதாகத் தெரிகிறது.

அப்போது பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர், பாரதியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி உள்ளார். இதில் நிலை தடுமாறிய இருவரும் கீழே விழுந்தனர்.



இந்த விபத்தில் பாரதி தலையில் பலத்த காயத்துடன் இருந்த நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பாரதி இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...