கோவையில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பேரூராட்சி ஊழியர் பலி..!

இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தவர் சிகிச்சைக்காகக் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பேரூராட்சி ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை மதுக்கரை முஸ்லிம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (58). இவர் திருமலையம்பாளையம் பேரூராட்சியில் கடந்த 20-ஆண்டுகளாகத் தண்ணீர் விடும் பணிகளைச் செய்து வருகிறார்.

இந்நிலையில் பாரதி நேற்று வழக்கம்போல் பணிக்குச் சென்றுவிட்டு மீண்டும் பாலக்காடு சர்வீஸ் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது சாலையின் வலது புறத்திலிருந்த இருசக்கர வாகன ஒர்க்ஷாப்க்கு செல்ல திரும்பியதாகத் தெரிகிறது.

அப்போது பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர், பாரதியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி உள்ளார். இதில் நிலை தடுமாறிய இருவரும் கீழே விழுந்தனர்.



இந்த விபத்தில் பாரதி தலையில் பலத்த காயத்துடன் இருந்த நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பாரதி இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...