கோவை சீரநாயக்கன்பாளையம் அருகே முன் விரோதம் காரணமாக நண்பரை அடித்து கொன்ற சக நண்பர்கள் கைது..!

குடி பழக்கத்திற்கு அடிமையான தியாகராஜன் என்பவருக்கும், செல்வபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திக், ரஞ்சித் ஆகியோருக்கு, மது சம்மந்தப்பட்ட விஷயத்தில் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.


கோவை: கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் நண்பரை சக நண்பர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



குடி பழக்கத்திற்கு அடிமையான தியாகராஜன் என்பவருக்கும், செல்வபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திக், ரஞ்சித் ஆகியோருக்கு, மது சம்மந்தப்பட்ட விஷயத்தில் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 14ம் தேதி பி.என். புதூரில் உள்ள கம்யூனிஸ்ட் மன்றத்தில் இருந்த தியாகராஜனை, ரஞ்சித் மற்றும் கார்த்திக் இருவரும் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், அவரை இருவரும் சேர்ந்து, விவேகானந்தா சாலை, மருதம் நகரில் வைத்து கட்டையால் அடித்துவிட்டு, தப்பிச் சென்றுள்ளனர்.



இதில் பலத்த காயமடைந்த தியாகராஜன் அங்கேயே உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, அவர் இறந்து கிடப்பதைப் பார்த்த ஒருவர், தியாகராஜனின் அண்ணன், முருகானந்தம் (57) என்பவரிடம் கூறியுள்ளார். அதன்படி, இறந்த நபரின் அண்ணன் அளித்த புகாரின் பேரில் ஆர்.எஸ். புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

விசாரணையில், கொலைக்கு காரணம் கார்த்திக் மற்றும் ரஞ்சித் என்று உறுதி செய்த போலீசார் இருவர் மீதும் IPC 302 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...