ஊட்டியில் இளைஞர்களுக்கு வனத் தீ மேலாண்மை பயிற்சி..!

ஊட்டியில் நடந்த பயிற்சியில் கூடலூர், பந்தலூர், நாடுகாணி மற்றும் ஜீன்பூல் ஆகிய பகுதிகளில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட 24 இளைஞர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.


நீலகிரி: ஊட்டி தீயணைப்பு நிலையத்தில், இளைஞர்களுக்கு வனத்தீ மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில், தற்போது கடுமையான வறட்சி நிலவுகிறது.

இதனால், காடுகளில் இலை சருகுகள், செடி கொடிகள் மற்றும் புற்கள் காய்ந்து எளிதில் தீப்பிடிக்கும் நிலை உள்ளது. மேலும், வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.

இதனைத் தடுக்கும் பொருட்டு, வனத்துறை சார்பில் தீத்தடுப்பு கோடுகள் அமைப்பதுடன், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மையம், மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் சார்பில், இளைஞர்களுக்கு ஒன்றரை மாத வனத்தீ மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக, ஊட்டியில் நடந்த பயிற்சியில் கூடலூர், பந்தலூர், நாடுகாணி மற்றும் ஜீன்பூல் ஆகிய பகுதிகளில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட 24 இளைஞர்கள் பங்கேற்றனர். இதில், நம் நாடு உட்பட பிற நாடுகளில் உள்ள காடுகளின் தன்மை, காட்டுத்தீயை காற்று வீசும் திசையில் எவ்வாறு முழுமையாக அணைப்பது குறித்து இளைஞர்களுக்கு விளக்கப்பட்டது.

ஜீன்பூல் வன விரிவாக்க மைய தாவரவியலாளர் கோமதி, சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மைய கள அலுவலர் குமரவேலு, கவுரவ வனப் பாதுகாவலர் மோகன்ராஜ் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன்ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...