சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவு..!

சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமனுக்கு சொந்தமான விளாங்குறிச்சியில் உள்ள அவரது வீடு மற்றும் சேரன் மாநகரில் உள்ள குடோன் ஆகிய இரண்டு இடங்களில் சோதனையானது நிறைவடைந்துள்ளது.


கோவை: சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவடைந்துள்ளது.

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, அவரது சகோதரர் எஸ் பி அன்பரசன், அன்பரசனின் மனைவி ஹேமலதா, மற்றும் எஸ் பி வேலுமணியின் நெருங்கிய நண்பரான வடவள்ளி சந்திரசேகர், கேசிபி இன்ஜினியரிங் பங்குதாரர் சந்திரபிரகாஷ் உள்ளிட்ட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் 58 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் கோவை மாவட்டத்தில் மட்டும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம், கோவைப்புதூர் ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி அறங்காவலர் மலர்விழி வீடு, காவல் துறை அதிகாரிகள், உள்ளிட்ட 41 இடங்களில் 6:30 முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இதில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமனுக்கு சொந்தமான வீடு, குடோன் மற்றும் பண்ணை வீடு ஆகிய 3 இடங்களில் சோதனை நடைபெற்று வந்த நிலையில், விளாங்குறிச்சியில் உள்ள அவரது வீடு மற்றும் சேரன் மாநகரில் உள்ள குடோன் ஆகிய இரண்டு இடங்களில் சோதனையானது நிறைவடைந்துள்ளது.

அங்கு எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது பண்ணை வீட்டில் தற்போது வரை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...