முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் உறவினர்கள் வருமானத்திற்கு அதிகமாக ரூ.58.23 கோடி சொத்து சேர்ப்பு - லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு..!

மேலும், வருமானத்தை விட 3,928 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் உறவினர்கள் வருமானத்திற்கு அதிகமாக ரூ.58.23 கோடி சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் 58 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். தற்போது வரை கோவை, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 58 இடங்களில் சோதனை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

சென்னையில் 8 இடங்களிலும், சேலத்தில் 4 இடங்களிலும், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தலா ஒரு இடத்திலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 இடங்களிலும் கோவையில் 41 இடங்களிலும், கேரள மாநிலத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் கோவை மைல்கல் பகுதியில் உள்ள வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் மீண்டும் சோதனை செய்து வருகிறார்கள்.

மேலும், அவர் தொடர்புடைய இன்னும் சில இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. முன்னாள் அமைச்சர் வேலுமணி, சகோதரர் அன்பரசன், மனைவி ஹேமலதா , நமது அம்மா நாளிதழ் வெளியீட்டார்கள் சந்திரசேகர், கட்டுமான ஒப்பந்ததாரர் சந்திரபிரகாஷ், ஒப்பந்ததாரர்கள் சுந்தரி, கார்த்திக், விஷ்ணுவர்தன், சரவணகுமார், ஆகியோர் மீதும் மகா கணபதி ஜுவல்வரி, ஆலயம் கோல்டு நகைக் கடை, கன்ஸ்ரோமால் கூட்ஸ் கட்டுமான நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து, 13 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து சென்னை, கோவை, திருப்பூர், சேலம், கேரளா உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, குடும்பத்தினர் ரூ. 58.23 கோடி கூடுதலாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவில் தெரிவித்துள்ளது. மேலும், வருமானத்தை விட 3,928% அதிகம் சொத்து சேர்த்ததாகவும் குற்றம்சாட்டி இருக்கிறது.

வேலுமணி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவரின் குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும், அதனால் அவர் வெளிநாட்டில் பணத்தை முதலீடு செய்திருக்கிறார்களா என்ற கோணத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதே போல, கோவை அவினாசி சாலையில் ஶ்ரீ கிருஷ்ணா கல்லூரி முதன்மை செயல் அதிகாரி மலர்விழி இல்லம், 3 காவல் துறை அதிகாரிகளின் வீடுகள், பேரூராட்சி துணை இயக்குநர் இல்லம் மற்றும் கேரளா ஆனைக்கட்டி அருகே வேலுமணி தரப்புக்கு சொந்தமாக ஓர் பண்ணை வீடு உள்ளது. கடந்தாண்டு அங்கு சோதனை நடக்கவில்லை. இப்போது கேரள பண்ணை வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...