திறந்த வெளி கழிப்பிடமில்லா மாநகராட்சியாக கோவையை அறிவித்து கோவை மாநகராட்சி ஆணையருக்கு ஸ்வச் பாரத் மிஷன் ஓடிஎப் சான்றிதழ் வழங்கப்பட்டது

கோவை மாநகராட்சியை திறந்த வெளி கழிப்பிடமில்லா மாநகரமாக தூய்மை பாரத இயக்கம் மற்றும் மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள குவாலிட்டி கவுன்சில் ஆப் இந்தியாவின் எஸ்வச் பாரத் மிஷன் திறந்த வெளி மலம் கழித்தல் திட்ட மேலாளர், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயனிடம்  சான்றிதழை வழங்கினார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில், "கடந்த 2017 ஜனவரி மாதம் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கோவை மாநகரை திறந்தவெளி கழிப்பிடமில்லா மாநகராட்சியாக அறிவிக்க தூய்மை பாரத இயக்கம் மற்றும் மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். 

இந்த ஆய்வின் போது கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள திறந்த வெளி மலம் கழிப்பிடம் இடத்தையும், பொது கழிப்பிடங்கள், சமுதாயக் கழிப்பிடங்கள், தனிநபர் கழிப்பிடங்கள் மற்றும் குடியிருப்புகள், குடிசை பகுதிகள், வர்த்தக இடங்கள், குளக்கரை ஒட்டிய பகுதிகள், வழிபாட்டுத் தளங்கள், பள்ளிகள் ஆகிய இடங்களில் 2 நாட்கள் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வறிக்கை புதுதில்லி  குவாலிட்டி கவுன்சில் ஆப் இந்தியாவின் அலுவலர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தூய்மை பாரத இயக்கம் மற்றும் மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள குவாலிட்டி கவுன்சில் ஆப் இந்தியாவின் மேலாளர் புவனேஷ் ரவாத், கோவை மாநகரை திறந்த வெளி கழிப்பிடமில்லா மாநகரமாக அறிவித்து அறிவிப்புச் சான்றிதழை இன்று (12.01.2017) மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரிடம் வழங்கினார்.

மேலும், கோவை மாநகரை திறந்தவெளி கழிப்பிடமில்லா நகரமாக அறிவிக்க காரணமாக இருந்து, ஒத்துழைப்பு நல்கிய அனைத்து பொதுமக்களுக்கும் மாநகராட்சி சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கோவை மாநகராட்சிப் பகுதிகளில் வருங்காலங்களில் பொது மக்கள் திறந்த வெளியில் மலம் கழிக்காமல் இருக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். 

குறிப்பாக பொது மக்கள் வீட்டிலுள்ள தனிநபர் கழிப்பிடங்கள், பொது கழிப்பிடங்கள் மற்றும் சமுதாயக் கழிப்பிடங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும், பொது மக்கள் தங்கள் பகுதிகளில் அல்லது அவர்களுடைய வீடுகளில் கழிப்பிட வசதி இல்லாமல் இருந்தால் சம்மந்தப்பட்ட மாநகராட்சி மண்டல அலுவலகத்தை தொடர்பு கொண்டால், மாநகராட்சி மூலம் உடனடியாக கழிப்பிடங்கள் கட்ட ஏற்பாடு செய்து தரப்படும்.

மேலும், பொது மக்கள் திறந்த வெளியில் மலம் கழித்தால் மாநகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்படும். ஆகவே, பொது மக்கள் இனி வரும் காலங்களில் கழிப்பிடங்களை மட்டுமே பயன்படுத்தி, கோவை மாநகரை திறந்த வெளி கழிப்பிடமில்லா மாநகரமாகவும், தூய்மையான மாநகரமாகவும் திகழ பொது மக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...