10-வது வார்டு அம்மன் நகரில் 80-ஆயிரம் ரூபாய் செலவில் பேருந்து நிழற்குடை

இந்த நிழற்குடை அமைக்கும் பணிக்காக 10-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கதிர்வேல் தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்தும், மேலும் சில இடங்களிலிருந்து நிதிகளைத் திரட்டியும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.



கோவை: கோவை மாநகராட்சியின் 10-வது வார்டில் தங்குதடையின்றி குடிநீர் கொண்டு செல்வதற்காக 1,50,000-ரூபாய் செலவில் பைப்லையன் அமைக்கப்பட்டுள்ளது. 80-ஆயிரம் ரூபாய் செலவில் பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டு வருகிறது என்று 10-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கதிர்வேல் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி 10-வது வார்டு அம்மன் நகரில் 80-ஆயிரம் ரூபாய் செலவில் பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 4-தினங்களுக்கு முன்பு தொடங்கிய இப்பணிக்கான மொத்த தொகை 80-ஆயிரமாக உள்ள நிலையில் கோவை மாநகராட்சி இடமிருந்து அனுமதி பெற்ற பின்னர் தொடங்கிய இப்பணியானது பொறுமையாக 10-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆன கதிர்வேல் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிழற்குடை அமைக்கும் பணிக்காக 10-வது வார்டு மாமன்ற உறுப்பினர் தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்தும், மேலும் சில இடங்களிலிருந்து நிதிகளைத் திரட்டியும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இரண்டு மூன்று நாட்களில் இப்பணியானது முடிவு பெறும் என்றும் தெரிவித்தார். கோவை மாநகராட்சியின் மக்கள் பிரதான கோரிக்கையாக முன்வைப்பது சாலை வசதிகள் மற்றும் கோடைக் காலம் என்பதால் குடிநீர்த் தேவையை அதிகரித்துள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது பெரிய கவுண்டர் நகர் விஜயலட்சுமி நகர் பூந்தோட்டம் நகர் வெற்றி நகர்ப் பகுதிகளில் தங்குதடையின்றி குடிநீர் கொண்டு செல்வதற்காக 1,50,000-ரூபாய் செலவில் பைப்லையன் அமைக்கப்பட்டுள்ளது.

மேல்நிலைப்பள்ளி வேண்டும் என்று கேட்கும் இப்பகுதி மக்களுக்குக் கல்வி கிடைத்திடக் கல்வி அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தற்போது அதற்கான பணிகள் துவங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், கூடிய விரைவில் இப்பகுதியில் உள்ள சாக்கடைகள் அனைத்தையும் பாதாளச் சாக்கடை திட்டத்தின் கீழ் கொண்டுவர விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...