இந்த நிழற்குடை அமைக்கும் பணிக்காக 10-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கதிர்வேல் தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்தும், மேலும் சில இடங்களிலிருந்து நிதிகளைத் திரட்டியும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
கோவை: கோவை மாநகராட்சியின் 10-வது வார்டில் தங்குதடையின்றி குடிநீர் கொண்டு செல்வதற்காக 1,50,000-ரூபாய் செலவில் பைப்லையன் அமைக்கப்பட்டுள்ளது. 80-ஆயிரம் ரூபாய் செலவில் பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டு வருகிறது என்று 10-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கதிர்வேல் தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி 10-வது வார்டு அம்மன் நகரில் 80-ஆயிரம் ரூபாய் செலவில் பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 4-தினங்களுக்கு முன்பு தொடங்கிய இப்பணிக்கான மொத்த தொகை 80-ஆயிரமாக உள்ள நிலையில் கோவை மாநகராட்சி இடமிருந்து அனுமதி பெற்ற பின்னர் தொடங்கிய இப்பணியானது பொறுமையாக 10-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆன கதிர்வேல் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிழற்குடை அமைக்கும் பணிக்காக 10-வது வார்டு மாமன்ற உறுப்பினர் தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்தும், மேலும் சில இடங்களிலிருந்து நிதிகளைத் திரட்டியும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இரண்டு மூன்று நாட்களில் இப்பணியானது முடிவு பெறும் என்றும் தெரிவித்தார். கோவை மாநகராட்சியின் மக்கள் பிரதான கோரிக்கையாக முன்வைப்பது சாலை வசதிகள் மற்றும் கோடைக் காலம் என்பதால் குடிநீர்த் தேவையை அதிகரித்துள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது பெரிய கவுண்டர் நகர் விஜயலட்சுமி நகர் பூந்தோட்டம் நகர் வெற்றி நகர்ப் பகுதிகளில் தங்குதடையின்றி குடிநீர் கொண்டு செல்வதற்காக 1,50,000-ரூபாய் செலவில் பைப்லையன் அமைக்கப்பட்டுள்ளது.
மேல்நிலைப்பள்ளி வேண்டும் என்று கேட்கும் இப்பகுதி மக்களுக்குக் கல்வி கிடைத்திடக் கல்வி அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தற்போது அதற்கான பணிகள் துவங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், கூடிய விரைவில் இப்பகுதியில் உள்ள சாக்கடைகள் அனைத்தையும் பாதாளச் சாக்கடை திட்டத்தின் கீழ் கொண்டுவர விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.