25 ஆயிரம் தபால் அனுப்ப இலக்கு நிர்ணயித்து, முதற்கட்டமாக இன்று 5 ஆயிரம் தபால் அனுப்பி முதலமைச்சரிடம் கோரிக்கை.
திருப்பூர்: முஸ்லிம் ஆயுள் கைதிகளை விடுதலை செய்யக் கோரி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்பூர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் பல ஆண்டுகளாக உள்ள முஸ்லிம் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என கோரி கடிதம் எழுதி முதல்வருக்கு அனுப்பும் இயக்கத்தை துவங்கி தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

25 ஆயிரம் தபால் அனுப்ப இலக்கு நிர்ணயித்துத் தொடர்ந்து தினமும் தபால் அனுப்ப முடிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக இன்று 5 ஆயிரம் தபால் அனுப்பி முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்பூர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் பல ஆண்டுகளாக உள்ள முஸ்லிம் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என கோரி கடிதம் எழுதி முதல்வருக்கு அனுப்பும் இயக்கத்தை துவங்கி தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
25 ஆயிரம் தபால் அனுப்ப இலக்கு நிர்ணயித்துத் தொடர்ந்து தினமும் தபால் அனுப்ப முடிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக இன்று 5 ஆயிரம் தபால் அனுப்பி முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.