திருப்பூர் இராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபம் அருகே 5 கி.மீ தூரம் இந்த மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூரில் மகளிர் தின விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, டிவைன் பைன் ஆர்ட்ஸ் சபா, JCI திருப்பூர் மெட்ரொ, திருப்பூர் துளிர் அறக்கட்டளை மற்றும் விதைகள் மக்கள் நல அறக்கட்டளை சார்பில், திருப்பூர் மாநகராட்சி, இராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபம் அருகே 5 கி.மீ தூரம் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடந்தது.
திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ், மேயர் தினேஷ் குமார் மற்றும் துணை மேயர் MKM.பாலசுப்ரமணியம் ஆகியோர் மராத்தான் ஓட்டப் பந்தயத்தை துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்வில், திருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.