Rapido இருசக்கர டாக்ஸியால் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை; ரத்து செய்ய கோரி கோவை ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை.

இரு சக்கர டாக்ஸி ஓட்டுநர் உரிய உரிமம், பணியாளர் உடை இல்லாமல் இயக்கி வரும் ராப்பிடோ டாக்ஸிகளால், ஆட்டோகளை பெரும்பாலும் மக்கள் தவிர்த்து விடுவதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டினர்.


கோவை: ராப்பிடோ (Rapido) என்ற தனியார் இரு சக்கர வாகன டாக்ஸி தற்போது பலராலும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவ்வகை டாக்ஸியால் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்றும் அந்த டாக்ஸி சேவையை உடனடியாக ரத்து செய்ய கோரியும் கோவை மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



இது குறித்து அவர்கள் கூறுகையில், "பயணிகளை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு டி-போர்டு பதிவு இருக்க வேண்டும். ஆனால், அந்த இரு சக்கர டாக்ஸி வாகனங்கள் ஓன்- போர்டு பதிவுகளாக உள்ளது. மேலும்,பல வாகனங்கள் இன்சூரன்ஸ் இல்லாமல் இயக்கப்படுகிறது.

மேலும், ஓன்-போர்டு வாகனங்களில் பயணம் செய்யும் போது பயணிகளுக்கு விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் செய்வதில் அதிக சிக்கல்கள் உள்ளது", என்றனர்.

அதே சமயம் இரு சக்கர டாக்ஸி ஓட்டுநர் உரிய உரிமம், பணியாளர் உடை இல்லாமல் இயக்கி வருவதாகவும் குற்றம் சாட்டினர்மேலும் இந்த இரு சக்கர டாக்ஸிகளால் ஆட்டோகளை பெரும்பாலும் மக்கள் தவிர்த்து விடுவதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்து ஆட்டோ ஓட்டுநர்கள் இந்த இருசக்கர டாக்ஸியை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியரிடம் முறையிட்டனர்.

மனு அளிக்க வந்த ஆய்டோ ஓட்டுநர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...