இரு சக்கர டாக்ஸி ஓட்டுநர் உரிய உரிமம், பணியாளர் உடை இல்லாமல் இயக்கி வரும் ராப்பிடோ டாக்ஸிகளால், ஆட்டோகளை பெரும்பாலும் மக்கள் தவிர்த்து விடுவதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டினர்.
கோவை: ராப்பிடோ (Rapido) என்ற தனியார் இரு சக்கர வாகன டாக்ஸி தற்போது பலராலும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவ்வகை டாக்ஸியால் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்றும் அந்த டாக்ஸி சேவையை உடனடியாக ரத்து செய்ய கோரியும் கோவை மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், "பயணிகளை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு டி-போர்டு பதிவு இருக்க வேண்டும். ஆனால், அந்த இரு சக்கர டாக்ஸி வாகனங்கள் ஓன்- போர்டு பதிவுகளாக உள்ளது. மேலும்,பல வாகனங்கள் இன்சூரன்ஸ் இல்லாமல் இயக்கப்படுகிறது.
மேலும், ஓன்-போர்டு வாகனங்களில் பயணம் செய்யும் போது பயணிகளுக்கு விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் செய்வதில் அதிக சிக்கல்கள் உள்ளது", என்றனர்.
அதே சமயம் இரு சக்கர டாக்ஸி ஓட்டுநர் உரிய உரிமம், பணியாளர் உடை இல்லாமல் இயக்கி வருவதாகவும் குற்றம் சாட்டினர்மேலும் இந்த இரு சக்கர டாக்ஸிகளால் ஆட்டோகளை பெரும்பாலும் மக்கள் தவிர்த்து விடுவதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்து ஆட்டோ ஓட்டுநர்கள் இந்த இருசக்கர டாக்ஸியை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியரிடம் முறையிட்டனர்.
மனு அளிக்க வந்த ஆய்டோ ஓட்டுநர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், "பயணிகளை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு டி-போர்டு பதிவு இருக்க வேண்டும். ஆனால், அந்த இரு சக்கர டாக்ஸி வாகனங்கள் ஓன்- போர்டு பதிவுகளாக உள்ளது. மேலும்,பல வாகனங்கள் இன்சூரன்ஸ் இல்லாமல் இயக்கப்படுகிறது.
மேலும், ஓன்-போர்டு வாகனங்களில் பயணம் செய்யும் போது பயணிகளுக்கு விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் செய்வதில் அதிக சிக்கல்கள் உள்ளது", என்றனர்.
அதே சமயம் இரு சக்கர டாக்ஸி ஓட்டுநர் உரிய உரிமம், பணியாளர் உடை இல்லாமல் இயக்கி வருவதாகவும் குற்றம் சாட்டினர்மேலும் இந்த இரு சக்கர டாக்ஸிகளால் ஆட்டோகளை பெரும்பாலும் மக்கள் தவிர்த்து விடுவதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்து ஆட்டோ ஓட்டுநர்கள் இந்த இருசக்கர டாக்ஸியை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியரிடம் முறையிட்டனர்.
மனு அளிக்க வந்த ஆய்டோ ஓட்டுநர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினர்.