கோவை - பொள்ளாச்சி நவமலை அருகே அரசு பேருந்து மற்றும் கார்களை வழி மறித்த ஒற்றை ஆண் காட்டு யானை; மின்வாரிய ஊழியர் காயம்.

நேற்று மாலை இரண்டு கார்களில் மின்வாரிய ஊழியர்கள் நவமலை சென்றுள்ளனர். அப்போது, ஒற்றை ஆண் காட்டு யானை இரண்டு கார்களையும் வழிமறித்து  தாக்கியது.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியாறு அருகே நவமலை வனப்பகுதியில், மின் வாரியத்திற்கு சொந்தமான அலுவலகம் மற்றும் பழங்குடி கிராமம் அமைந்துள்ளது. கோவை மற்றும் பொள்ளாச்சியில் இருந்து செல்லும் மின்வாரிய ஊழியர்கள் அங்கு பணிகளை மேற்கொள்வது வழக்கம்.

இந்நிலையில்,நேற்று வழக்கம்போல் மாலை இரண்டு கார்களில் மின்வாரிய ஊழியர்கள் நவமலை சென்றுள்ளனர். அப்போது, நவமலை அருகே சென்றபோது போது வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை ஆண் காட்டு யானை இரண்டு கார்களையும் வழிமறித்துதாக்கியது.ஒரு கார் முன்னோக்கி வந்த நிலையில், சரவணன் என்பவர் வந்த மற்றொரு காரை சாலையில் இருந்து வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்றது.

இதையடுத்து, காரை தொடர்ந்து புரட்டிப் போட முயன்றுள்ளது. அதேபோல், மற்றொரு காரையும் துரத்திச் சென்ற ஒற்றை காட்டு யானை அந்தக் காரையும் தாக்கியது. இது குறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி வனத்துறையினர் விரைந்து வந்து, கார்களை தாக்கிக் கொண்டிருந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். 



இதையடுத்து காரில் காயங்களுடன் இருந்தமின்வாரிய ஊழியர் சரவணன் (49) என்பவரை மீட்டு ஆழியார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதேபோல், அங்கு வந்த அரசு பேருந்தையும் ஒற்றை காட்டு யானை வழிமறித்து தாக்க முயன்றது என்பது குறிப்பிடத்தக்கது

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...